ஹோட்டல் ஊழியரைத் தாக்கிய போலீஸ்: சிசிடிவி ஆதாரத்தால் சிக்கிய தலைமைக் காவலர் சஸ்பெண்ட்
ஈரோடு ஊரக உட்கோட்டத்திற்கு உட்பட்ட காஞ்சிக்கோயில் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவர் மோகன்குமார். இவர் கடந்த 08.02.2026 அன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, காஞ்சிக்கோயில் 4 ரோடு பகுதியில் உள்ள ‘சஷ்டி பாஸ்ட் புட்’ உணவகம் இரவு 10 மணிக்கு மேலாகியும் இயங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தலைமைக் காவலர் மோகன்குமார், கடையை ஏன் இன்னும் மூடவில்லை எனக் கேட்டு அங்கிருந்த ஊழியர் ராம்துலால் மோண்டல் என்பவரைத் தகாத வார்த்தைகளால் […]